×

பேரிடர் காலங்களில் ஹெலிகேம் மூலம் படங்கள் எடுக்க திட்டமிடப்பட்டுள்ளது : அமைச்சர் உதயகுமார்

சென்னை : பேரிடர் காலங்களில் ஹெலிகேம் மூலம் படங்கள் எடுக்க திட்டமிடப்பட்டுள்ளதாக அமைச்சர் உதயகுமார் கூறியுள்ளார். தமிழகத்தில் 4,000 இடங்கள் மழையால் பாதிக்கும் பகுதிகளாக உள்ளதால், அங்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் தன்னார்வலர்களை கொண்டு உருவாக்கப்பட்டுள்ள பேரிடர் உதவிப்படைக்கு தேசிய, மாநில பேரிடர் மீட்புப்படை மற்றும் தீயணைப்பு துறையினர் உதவியுடன் பயிற்சி வழங்கப்படும் என்று அமைச்சர் உதயகுமார் தகவல் அளித்துள்ளார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Uthayakumar ,disaster , Disaster Seasons, Heligame, Minister Uthayakumar
× RELATED கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து மாநில...